Saturday , May 16 2026
Breaking News

Recent Posts

கனடாவில் சிக்கிய நடிகர் விஜயின் மகன் வீடு திரும்பினார்

கொரோனா ஊரடங்கால் நாடு திரும்ப முடியாமல் கனடாவில் சிக்கிய நடிகர் விஜய் மகன் வீடு திரும்பியதை அடுத்து குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் நாடு திரும்ப முடியாமல் கனடாவில் சிக்கிய நடிகர் விஜய் மகன் வீடு திரும்பியதை அடுத்து குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திரைப்பட துறை தொடர்பாக கனடாவில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார் விஜய் மகன் ஜேசன் சஞ்சய். கொரோனா அச்சுறுத்தலால் விமானசேவைக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை அடுத்து சஞ்சய் நாடு …

Read More »

அருள்நிதியின் ‘டைரி’யை வெளியிட்ட வெற்றிமாறன்

தனித்துவம் மிக்க கதைக் களத்தில், தனது பாத்திரப்படைப்பு மிகவும் வித்தியாசமாக அமைந்திருக்கிறதா என்பதை மிகுந்த ஆர்வத்துடன் கவனமாகத் தேர்வு செய்து நடிப்பதுதான் நடிகர் அருள்நதியின் வழக்கம். அதனால்தான் அவர் பாராட்டப்படும் கலைஞனாக இருப்பதுடன், அவரது படங்கள் தயாரிப்பாளருக்கு லாபம் தேடித்தருவனவாகவும் அமைகின்றன. தொடர் வெற்றிகளை ஈட்டி வரும் அருள்நிதி தற்போது நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் ‘டைரி’ என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை (21-07-2020) வெளியிடப்பட்டது. இயக்குநர் அஜய் …

Read More »

புதிய அத்தியாயங்களுடன் மீண்டும் திருமணம்தொடர்

ஊரடங்கு காலத்தில் தமிழ் பார்வையாளர்களுக்கு பொழுதுபோக்கு நிறைந்த அற்புதமான நிகழ்ச்சிகளையும், தொடர்களையும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது. இந்த தொலைக்காட்சியின் புகழ்பெற்ற தொடரான திருமணம் தொடர் அடுத்த வாரம் ஜூலை 20-ந்தேதி திங்கள் முதல் புத்தம்புது பொலிவுடன், புதிய அத்தியாயங்களுடன் பல்வேறு திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த தொடராக ஒளிபரப்பாக உள்ளது. அதேபோலே ஓவியா மற்றும் உயிரே போன்ற தொடர்களும் பார்வையாளர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டும் வகையில் ஒளிபரப்பாகின்றன. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்˜- ஓவியா – திங்கள் முதல் சனி வரை இரவு 7.30 மணி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் மெகா ஹிட் தொடரான ஓவியா இந்த வார துவக்கத்தில் 400 அத்தியாயங்களை தாண்டி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த தொடர் அனைவரிடையேயும் மிகுந்த வரவேற்பை பெற்ற தொடராகும். சரவணனுடன் தான் செய்து கொண்ட திருமணத்தின் பின்னணியில் உள்ள உண்மை குறித்து ஓவியா தெரிந்து கொள்கிறாள். இந்த நிலையில் இந்த தொடர் ஒரு புதிய பயணத்தில் பரிணமிக்கிறது. அவளுக்கும் சூர்யாவுக்கும் இடையிலான உறவை வசீகரனும் சரவணனும் சந்தேகிக்கக் தொடங்கியதால் இருவரது வாழ்க்கையிலும் எதிர்பாராத பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. இந்த சிக்கல்களில் இருந்து அவர்கள் எப்படி வெளியே வந்தார்கள் என்பதை காண கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை நாள்தோறும் 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஓவியா தொடரை பாருங்கள். அம்மன் – திங்கள் முதல் சனி வரை இரவு 8.00 மணி அம்மன் மீது அதீத பக்தி கொண்ட சக்தி என்ற பெண், நீதிபதி உயிருக்கு ஆபத்து இருப்பதாக சொல்கிறாள். சங்குலிங்கத்தின் சதி திட்டத்திலிருந்து அவரை காப்பாற்ற அம்மனிடம் அவள் பிரார்த்தனை செய்கிறாள்.சக்தியின் கடும் பிரார்த்தனையின் காரணமாக பார்வதி தனது கணவரை மீட்டாரா? இல்லையா? என்பதை காண கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் அம்மன் தொடரை பாருங்கள். இதயத்தை திருடாதே – திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 மணி சகானாவும் சிவாவும் இருவேறு துருவங்களாக இருக்கிறார்கள். எதிரிகளாக இருந்த அவர்கள் வாழ்க்கை துணைவர்களாக மாறுகிறார்கள். இந்த நிலையில் பவானியுடன் ஏற்பட்ட சண்டைக்கு பின் நீலகண்டன் காணாமல் போய் விடுகிறார். நீலகண்டனை அவரது குடும்பத்தினர் கண்டுபிடித்தனரா? என்பதை காண கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இதயத்தை திருடாதே தொடரை பாருங்கள். மாங்கல்ய தோஷம் – திங்கள் முதல் சனி வரை இரவு 9.00 மணி தருண் நித்யாவை திருமணம் செய்து கொள்ளப்போவதாக ஆறுமுகத்திடம் கூறுகிறார். அதற்கு ஆறுமுகம் மறுத்தபோதிலும்,  நித்யாவை திருமணம் செய்வதில் தருண் பிடிவாதமாக இருக்கிறார். இதற்கிடையே ரகுவரன் நித்யாவை திருமணம் செய்ய ஒரு மகத்தான திட்டத்தை வகுக்கிறான். இந்த நிலையில் தருணிடம் இருந்து நித்யாவை  திருமணம் செய்யத் துடிக்கும் ரகுவரனின் திட்டம் நிறைவேறுமா? நித்யா மற்றும் தருண் ஆகியோரின் தலைவிதி என்ன? என்பதைக் காண கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9.00 மணிக்கு ஒளிபரப்பாகும் மாங்கல்ய தோஷம் தொடரை பாருங்கள்.  உயிரே – திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணி செழியனும் பவித்ராவும் தங்கள் வாழ்க்கையை துவங்குகையில், பவித்ரா மீதான நரேனின் காதல் வலுவடைகிறது. இந்த நிலையில், நரேன் பிறந்த நாள் அன்று பவித்ராவும் நரேனும் நேருக்கு நேர் சந்திப்பதை தடுக்க செழியன் தந்திரம் செய்கிறான்.  இதற்கிடையே சுந்தரபாண்டி கையில் ஒரு பைலுடன் வருகிறார். அது அந்த முழுக் குடும்பத்தையும் திடுக்கிட வைக்கிறது. மறைக்கப்பட்ட பவித்ராவின் உண்மையை சுந்தரபாண்டி வெளியே சொல்கிறாரா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் உயிரே தொடரை பாருங்கள். திருமணம் – திங்கள் முதல் சனி வரை இரவு 10.00 மணி தன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள இயலாது என்பது குறித்து தெரிந்தவுடன் ஜனனி மிகுந்த வேதனையடைகிறாள். வேறொரு பெண்ணை மணந்து அவளுடன் குடும்பம் நடத்தி குழந்தை பெற்றுக் கொண்டு சந்தோஷ் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்த அவளுக்கு மேலும் வேதனை அதிகமாகிறது. சந்தோஷை தவிர்ப்பதற்காக அவள் சில நாட்கள் தன் தந்தையின் வீட்டில் தங்க முடிவு செய்கிறாள். சந்தோஷ் மற்றும் ஜனனிக்கு இடையே இந்த சிக்கலான சூழ்நிலையில் ஒரு இளம் பெண் சந்தோஷின் அலுவலகத்தில் வேலைக்கு சேருகிறாள். இது அவர்களது திருமண வாழ்க்கையில் எவ்வாறு பேரழிவை ஏற்படுத்துகிறது என்பதைக் காண உங்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் திருமணம் தொடரை பாருங்கள். அதேபோல திங்கள் முதல் சனி வரை நாள்தோறும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஷ்ரீகிருஷ்ணா மற்றும் 7 மணிக்கு ஒளிபரப்பாகும் பொழுதுபோக்கு தொடரான சந்திரகாந்தா போன்ற தொடர்களையும் காணத்தவறாதீர்கள். இந்த அற்புதமான அனைத்து நிகழ்ச்சிகளையும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பார்த்து மகிழுங்கள். மேலும் பார்வையாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஆன்லைனில் வூட் இணையதளத்திலும் இந்த தொடரகளை கண்டு மகிழலாம். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி அனைத்து முன்னணி கேபிள் நெட்வொர்க் மற்றும் டிடிஎச் தளங்களான சன் டைரக்ட்டில் சேனல் எண்.128, டாடா ஸ்கையில் சேனல் எண்.1555, ஏர்டெல்லில் சேனல் எண்.763, டிஷ் டிவியில் சேனல் எண்.1808 மற்றும் வீடியோகான் டி2எச்சில் சேனல் எண்.553-ல் ஒளிபரப்பாகிறது.

Read More »