Saturday , September 5 2026

Publisher

புதிய அத்தியாயங்களுடன் மீண்டும் திருமணம்தொடர்

ஊரடங்கு காலத்தில் தமிழ் பார்வையாளர்களுக்கு பொழுதுபோக்கு நிறைந்த அற்புதமான நிகழ்ச்சிகளையும், தொடர்களையும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது. இந்த தொலைக்காட்சியின் புகழ்பெற்ற தொடரான திருமணம் தொடர் அடுத்த வாரம் ஜூலை 20-ந்தேதி திங்கள் முதல் புத்தம்புது பொலிவுடன், புதிய அத்தியாயங்களுடன் பல்வேறு திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த தொடராக ஒளிபரப்பாக உள்ளது. அதேபோலே ஓவியா மற்றும் உயிரே போன்ற தொடர்களும் பார்வையாளர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டும் வகையில் ஒளிபரப்பாகின்றன. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்˜- ஓவியா – திங்கள் முதல் சனி வரை இரவு 7.30 மணி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் மெகா ஹிட் தொடரான ஓவியா இந்த வார துவக்கத்தில் 400 அத்தியாயங்களை தாண்டி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த தொடர் அனைவரிடையேயும் மிகுந்த வரவேற்பை பெற்ற தொடராகும். சரவணனுடன் தான் செய்து கொண்ட திருமணத்தின் பின்னணியில் உள்ள உண்மை குறித்து ஓவியா தெரிந்து கொள்கிறாள். இந்த நிலையில் இந்த தொடர் ஒரு புதிய பயணத்தில் பரிணமிக்கிறது. அவளுக்கும் சூர்யாவுக்கும் இடையிலான உறவை வசீகரனும் சரவணனும் சந்தேகிக்கக் தொடங்கியதால் இருவரது வாழ்க்கையிலும் எதிர்பாராத பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. இந்த சிக்கல்களில் இருந்து அவர்கள் எப்படி வெளியே வந்தார்கள் என்பதை காண கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை நாள்தோறும் 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஓவியா தொடரை பாருங்கள். அம்மன் – திங்கள் முதல் சனி வரை இரவு 8.00 மணி அம்மன் மீது அதீத பக்தி கொண்ட சக்தி என்ற பெண், நீதிபதி உயிருக்கு ஆபத்து இருப்பதாக சொல்கிறாள். சங்குலிங்கத்தின் சதி திட்டத்திலிருந்து அவரை காப்பாற்ற அம்மனிடம் அவள் பிரார்த்தனை செய்கிறாள்.சக்தியின் கடும் பிரார்த்தனையின் காரணமாக பார்வதி தனது கணவரை மீட்டாரா? இல்லையா? என்பதை காண கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் அம்மன் தொடரை பாருங்கள். இதயத்தை திருடாதே – திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 மணி சகானாவும் சிவாவும் இருவேறு துருவங்களாக இருக்கிறார்கள். எதிரிகளாக இருந்த அவர்கள் வாழ்க்கை துணைவர்களாக மாறுகிறார்கள். இந்த நிலையில் பவானியுடன் ஏற்பட்ட சண்டைக்கு பின் நீலகண்டன் காணாமல் போய் விடுகிறார். நீலகண்டனை அவரது குடும்பத்தினர் கண்டுபிடித்தனரா? என்பதை காண கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இதயத்தை திருடாதே தொடரை பாருங்கள். மாங்கல்ய தோஷம் – திங்கள் முதல் சனி வரை இரவு 9.00 மணி தருண் நித்யாவை திருமணம் செய்து கொள்ளப்போவதாக ஆறுமுகத்திடம் கூறுகிறார். அதற்கு ஆறுமுகம் மறுத்தபோதிலும்,  நித்யாவை திருமணம் செய்வதில் தருண் பிடிவாதமாக இருக்கிறார். இதற்கிடையே ரகுவரன் நித்யாவை திருமணம் செய்ய ஒரு மகத்தான திட்டத்தை வகுக்கிறான். இந்த நிலையில் தருணிடம் இருந்து நித்யாவை  திருமணம் செய்யத் துடிக்கும் ரகுவரனின் திட்டம் நிறைவேறுமா? நித்யா மற்றும் தருண் ஆகியோரின் தலைவிதி என்ன? என்பதைக் காண கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9.00 மணிக்கு ஒளிபரப்பாகும் மாங்கல்ய தோஷம் தொடரை பாருங்கள்.  உயிரே – திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணி செழியனும் பவித்ராவும் தங்கள் வாழ்க்கையை துவங்குகையில், பவித்ரா மீதான நரேனின் காதல் வலுவடைகிறது. இந்த நிலையில், நரேன் பிறந்த நாள் அன்று பவித்ராவும் நரேனும் நேருக்கு நேர் சந்திப்பதை தடுக்க செழியன் தந்திரம் செய்கிறான்.  இதற்கிடையே சுந்தரபாண்டி கையில் ஒரு பைலுடன் வருகிறார். அது அந்த முழுக் குடும்பத்தையும் திடுக்கிட வைக்கிறது. மறைக்கப்பட்ட பவித்ராவின் உண்மையை சுந்தரபாண்டி வெளியே சொல்கிறாரா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் உயிரே தொடரை பாருங்கள். திருமணம் – திங்கள் முதல் சனி வரை இரவு 10.00 மணி தன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள இயலாது என்பது குறித்து தெரிந்தவுடன் ஜனனி மிகுந்த வேதனையடைகிறாள். வேறொரு பெண்ணை மணந்து அவளுடன் குடும்பம் நடத்தி குழந்தை பெற்றுக் கொண்டு சந்தோஷ் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்த அவளுக்கு மேலும் வேதனை அதிகமாகிறது. சந்தோஷை தவிர்ப்பதற்காக அவள் சில நாட்கள் தன் தந்தையின் வீட்டில் தங்க முடிவு செய்கிறாள். சந்தோஷ் மற்றும் ஜனனிக்கு இடையே இந்த சிக்கலான சூழ்நிலையில் ஒரு இளம் பெண் சந்தோஷின் அலுவலகத்தில் வேலைக்கு சேருகிறாள். இது அவர்களது திருமண வாழ்க்கையில் எவ்வாறு பேரழிவை ஏற்படுத்துகிறது என்பதைக் காண உங்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் திருமணம் தொடரை பாருங்கள். அதேபோல திங்கள் முதல் சனி வரை நாள்தோறும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஷ்ரீகிருஷ்ணா மற்றும் 7 மணிக்கு ஒளிபரப்பாகும் பொழுதுபோக்கு தொடரான சந்திரகாந்தா போன்ற தொடர்களையும் காணத்தவறாதீர்கள். இந்த அற்புதமான அனைத்து நிகழ்ச்சிகளையும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பார்த்து மகிழுங்கள். மேலும் பார்வையாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஆன்லைனில் வூட் இணையதளத்திலும் இந்த தொடரகளை கண்டு மகிழலாம். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி அனைத்து முன்னணி கேபிள் நெட்வொர்க் மற்றும் டிடிஎச் தளங்களான சன் டைரக்ட்டில் சேனல் எண்.128, டாடா ஸ்கையில் சேனல் எண்.1555, ஏர்டெல்லில் சேனல் எண்.763, டிஷ் டிவியில் சேனல் எண்.1808 மற்றும் வீடியோகான் டி2எச்சில் சேனல் எண்.553-ல் ஒளிபரப்பாகிறது.

Read More »

ஸ்ரீகாந்த்தேவாவின் பிறந்தநாளன்று நடந்த கட்டில் திரைப்படப்பாடல்!

பலநூறு பேர்களுடன் நடைபெறும் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவாவின் பிறந்தநாள் இந்த ஆண்டு எளிமையாக கட்டில் திரைப்படப்பாடல் பணியோடு நிகழ்ந்தது.இதுபற்றி கட்டில் திரைப்பட இயக்குனரும், கதாநாயகனுமான இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது:விஜய் நடித்த சிவகாசி, அஜித் நடித்த ஆழ்வார், மற்றும் M.குமரன் Son of மஹாலெட்சுமி போன்ற பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த ஸ்ரீகாந்த்தேவா எனது கட்டில் திரைப்படத்திற்கு இசை அமைக்கும் பணிகள் இப்போது நடைபெற்று வருகிறது.ஸ்ரீகாந்த்தேவாவின் பிறந்தநாள், இயக்குனர்கள், நடிகர்கள் உட்பட நூற்றுக்கணக்கான தொழில்நுட்ப கலைஞர்கள் சூழ  ஆண்டுதோறும்  …

Read More »

சுஷாந்த் சிங் நடித்த “தில் பெச்சாரே” படத்தின் தாரே கின் பாடல் வெளியீடு

சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்த கடைசி படம் தில் பெச்சாரே. இந்தப் படத்தில் சுஷாந்த் ஜோடியாக சஞ்சனா சங்கி நடித்துள்ளார். முகேஷ் சப்ரா இயக்கிய இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் டைட்டில் ட்ராக் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல மக்களிடையே வரவேற்பை பெற்றது. தில் பெச்சாரே படத்தின் “தாரே கின் ” இரண்டாவது பாடலை மோஹித் செளஹான் …

Read More »

ரம்யா நம்பீசனின் ‘சூரிய அஸ்தமனக் குறிப்பேடுகள்’!

வெற்றிகரமான நடிகையாக வலம் வரும் ரம்யா நம்பீசன் சைபர் வெளியில் துவக்கியிருக்கும் ‘ரம்யா நம்பீசன் என்கோர்’ என்ற இணையதள நிகழ்ச்சி பரவலான கவனத்தை ஈர்த்து பலரது பாராட்டுக்களை தொடர்ந்து பெற்று வருகிறது. தன் திறமைகளை கலை வடிவத்தின் பல்வேறு தளங்களிலும் வெளிப்படுத்திவரும் ரம்யா, இன்னும் பல புதிய முயற்சிகளிலும் முனைப்புடன் ஈடுபடத் தொடங்கியிருக்கிறார். தற்போது இயக்குநர் பத்ரி வெங்கடேஷுடன் இணைந்து ரம்யா நம்பீசனின் சூரிய அஸ்தமனக் குறிப்பேடுகள் (Sunset Diary …

Read More »

133 மில்லியனுக்கும் அதிகமானப் பார்வைகளைக் கடந்து சாதனைப் படைத்த பிரபல இசையமைப்பாளர்!

கடந்த சில வருடங்களாக எல்லா நடன மேடைகளிலும் தவறாமல் இந்த இரண்டு பாடல்கள் இடம்பெற்று வருகிறது. ஒன்று ‘ஹரஹர மகாதேவகி’ பாடல், மற்றொன்று ‘ஹே சின்ன மச்சான்’ பாடல். பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் அம்ரிஷ் கணேஷ் தான் இந்த இரண்டு பாடல்களுக்கும் இசையமைப்பாளர். இவர் இசையமைத்த இந்த இரண்டு பாடல்களும் இந்தியாவின் தலைசிறந்த நடன இயக்குநர்களான பிரபுதேவாவையும் லாரன்ஸையும் அசுர நடனம் ஆட வைத்தது. மாஸ்டர்களையே …

Read More »

சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி’!

சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி’ திரைப்படம், குறிப்பிடத்தக்க வகையில் எதிர்பார்ப்பு அலைகளை துவக்கத்திலிருந்தே ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து பணியாற்றி வந்த படக்குழுவை, சர்வதேச நோய் பரவல் சற்றே நிறுத்தச் செய்துவிட்டது என்றாலும் ஆதித்யா மியூசிக் நிறுவனம் ‘கபடதாரி’ படத்தின் இசை உரிமையை பெற்றிருக்கும் நல்ல செய்தியுடன் இப்போது மீண்டும் படக்குழு உற்சாகத்துடன் தன் பணிகளைத் துவக்கியிருக்கிறது. இது குறித்து பகிர்ந்து கொண்ட க்ரியேடிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த க்ரியேடிவ் …

Read More »

“கந்தர் சஷ்டி கவசம்” விவகாரம் பற்றி நடிகர் ராஜ்கிரண்

ஒவ்வொரு மனிதனுக்கும்,எந்த வகையிலேனும்,தனக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ளஉரிமை இருக்கிறது. அது, அவனது சுதந்திரம். முருகப்பெருமானை நம்புவோர்க்கு,“கந்தர் சஷ்டி கவசம்” என்பது,“ஒரு பாதுகாப்பு அரண்”. இதை ஆழ்ந்து படித்தால்,அறிவியல்பூர்வமான,மனோதத்துவரீதியானஆத்ம பலன்கள் இருக்கின்றன… இறைவனை நம்பாதோர்க்கு,“நம்பாமை” என்பது,அவர்களின் சுதந்திரம். நம்பிக்கை கொண்டோர்க்கு,“நம்புதல்” என்பது,அவர்களின் சுதந்திரம். இதில், அவரவர் எல்லையோடுஅவரவர்கள் நின்று கொள்வது தான்,மேன்மையானது. தேவையில்லாமல் மற்றவர் எல்லைக்குள்புகுந்து, விமர்சனம் செய்வதென்பது,மிகவும் கீழ்மையானது… இந்த கொடிய கொரோனா காலகட்டத்தில்,நோயோடும், நோய் பயத்தோடும்,பொருளாதார சீர்கேட்டோடும்,உண்ண உணவின்றிகோடிக்கணக்கான நம் …

Read More »