கோவிட் – 19 பெருந்தொற்றையொட்டி உலகெங்கும் மட்டுமன்றி, தமிழ்நாட்டிலும் பெரும்பாதிப்புகளை உருவாக்கியிருக்கின்ற நடப்பு நெருக்கடி நிலையின்போது நம்பிக்கையளிக்கும் நேர்மறை உணர்வையும் மற்றும் நல்ல மனநிலையையும் வழங்கி, தனது பார்வையாளர்களை ஊக்கப்படுத்தும் ஒரு முயற்சியாக கலர்ஸ் தமிழ் அலைவரிசையானது மற்றுமொரு நடவடிக்கையை எடுத்திருக்கிறது. வீட்டில் இருந்துகொண்டே முருகப்பெருமான் பற்றி குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வழங்குகின்ற அற்புதமான கற்பித்தல்கள் மற்றும் விளக்கங்களைப் பெற்று கலாச்சார பாரம்பரிய பிணைப்பில் ஈடுபாட்டுடன் தனது பார்வையாளர்கள் …
Read More »புதிய அத்தியாயங்களுடன் மீண்டும் திருமணம்தொடர்
ஊரடங்கு காலத்தில் தமிழ் பார்வையாளர்களுக்கு பொழுதுபோக்கு நிறைந்த அற்புதமான நிகழ்ச்சிகளையும், தொடர்களையும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது. இந்த தொலைக்காட்சியின் புகழ்பெற்ற தொடரான திருமணம் தொடர் அடுத்த வாரம் ஜூலை 20-ந்தேதி திங்கள் முதல் புத்தம்புது பொலிவுடன், புதிய அத்தியாயங்களுடன் பல்வேறு திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த தொடராக ஒளிபரப்பாக உள்ளது. அதேபோலே ஓவியா மற்றும் உயிரே போன்ற தொடர்களும் பார்வையாளர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டும் வகையில் ஒளிபரப்பாகின்றன. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்˜- ஓவியா – திங்கள் முதல் சனி வரை இரவு 7.30 மணி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் மெகா ஹிட் தொடரான ஓவியா இந்த வார துவக்கத்தில் 400 அத்தியாயங்களை தாண்டி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த தொடர் அனைவரிடையேயும் மிகுந்த வரவேற்பை பெற்ற தொடராகும். சரவணனுடன் தான் செய்து கொண்ட திருமணத்தின் பின்னணியில் உள்ள உண்மை குறித்து ஓவியா தெரிந்து கொள்கிறாள். இந்த நிலையில் இந்த தொடர் ஒரு புதிய பயணத்தில் பரிணமிக்கிறது. அவளுக்கும் சூர்யாவுக்கும் இடையிலான உறவை வசீகரனும் சரவணனும் சந்தேகிக்கக் தொடங்கியதால் இருவரது வாழ்க்கையிலும் எதிர்பாராத பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. இந்த சிக்கல்களில் இருந்து அவர்கள் எப்படி வெளியே வந்தார்கள் என்பதை காண கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை நாள்தோறும் 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஓவியா தொடரை பாருங்கள். அம்மன் – திங்கள் முதல் சனி வரை இரவு 8.00 மணி அம்மன் மீது அதீத பக்தி கொண்ட சக்தி என்ற பெண், நீதிபதி உயிருக்கு ஆபத்து இருப்பதாக சொல்கிறாள். சங்குலிங்கத்தின் சதி திட்டத்திலிருந்து அவரை காப்பாற்ற அம்மனிடம் அவள் பிரார்த்தனை செய்கிறாள்.சக்தியின் கடும் பிரார்த்தனையின் காரணமாக பார்வதி தனது கணவரை மீட்டாரா? இல்லையா? என்பதை காண கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் அம்மன் தொடரை பாருங்கள். இதயத்தை திருடாதே – திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 மணி சகானாவும் சிவாவும் இருவேறு துருவங்களாக இருக்கிறார்கள். எதிரிகளாக இருந்த அவர்கள் வாழ்க்கை துணைவர்களாக மாறுகிறார்கள். இந்த நிலையில் பவானியுடன் ஏற்பட்ட சண்டைக்கு பின் நீலகண்டன் காணாமல் போய் விடுகிறார். நீலகண்டனை அவரது குடும்பத்தினர் கண்டுபிடித்தனரா? என்பதை காண கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இதயத்தை திருடாதே தொடரை பாருங்கள். மாங்கல்ய தோஷம் – திங்கள் முதல் சனி வரை இரவு 9.00 மணி தருண் நித்யாவை திருமணம் செய்து கொள்ளப்போவதாக ஆறுமுகத்திடம் கூறுகிறார். அதற்கு ஆறுமுகம் மறுத்தபோதிலும், நித்யாவை திருமணம் செய்வதில் தருண் பிடிவாதமாக இருக்கிறார். இதற்கிடையே ரகுவரன் நித்யாவை திருமணம் செய்ய ஒரு மகத்தான திட்டத்தை வகுக்கிறான். இந்த நிலையில் தருணிடம் இருந்து நித்யாவை திருமணம் செய்யத் துடிக்கும் ரகுவரனின் திட்டம் நிறைவேறுமா? நித்யா மற்றும் தருண் ஆகியோரின் தலைவிதி என்ன? என்பதைக் காண கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9.00 மணிக்கு ஒளிபரப்பாகும் மாங்கல்ய தோஷம் தொடரை பாருங்கள். உயிரே – திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணி செழியனும் பவித்ராவும் தங்கள் வாழ்க்கையை துவங்குகையில், பவித்ரா மீதான நரேனின் காதல் வலுவடைகிறது. இந்த நிலையில், நரேன் பிறந்த நாள் அன்று பவித்ராவும் நரேனும் நேருக்கு நேர் சந்திப்பதை தடுக்க செழியன் தந்திரம் செய்கிறான். இதற்கிடையே சுந்தரபாண்டி கையில் ஒரு பைலுடன் வருகிறார். அது அந்த முழுக் குடும்பத்தையும் திடுக்கிட வைக்கிறது. மறைக்கப்பட்ட பவித்ராவின் உண்மையை சுந்தரபாண்டி வெளியே சொல்கிறாரா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் உயிரே தொடரை பாருங்கள். திருமணம் – திங்கள் முதல் சனி வரை இரவு 10.00 மணி தன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள இயலாது என்பது குறித்து தெரிந்தவுடன் ஜனனி மிகுந்த வேதனையடைகிறாள். வேறொரு பெண்ணை மணந்து அவளுடன் குடும்பம் நடத்தி குழந்தை பெற்றுக் கொண்டு சந்தோஷ் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்த அவளுக்கு மேலும் வேதனை அதிகமாகிறது. சந்தோஷை தவிர்ப்பதற்காக அவள் சில நாட்கள் தன் தந்தையின் வீட்டில் தங்க முடிவு செய்கிறாள். சந்தோஷ் மற்றும் ஜனனிக்கு இடையே இந்த சிக்கலான சூழ்நிலையில் ஒரு இளம் பெண் சந்தோஷின் அலுவலகத்தில் வேலைக்கு சேருகிறாள். இது அவர்களது திருமண வாழ்க்கையில் எவ்வாறு பேரழிவை ஏற்படுத்துகிறது என்பதைக் காண உங்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் திருமணம் தொடரை பாருங்கள். அதேபோல திங்கள் முதல் சனி வரை நாள்தோறும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஷ்ரீகிருஷ்ணா மற்றும் 7 மணிக்கு ஒளிபரப்பாகும் பொழுதுபோக்கு தொடரான சந்திரகாந்தா போன்ற தொடர்களையும் காணத்தவறாதீர்கள். இந்த அற்புதமான அனைத்து நிகழ்ச்சிகளையும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பார்த்து மகிழுங்கள். மேலும் பார்வையாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஆன்லைனில் வூட் இணையதளத்திலும் இந்த தொடரகளை கண்டு மகிழலாம். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி அனைத்து முன்னணி கேபிள் நெட்வொர்க் மற்றும் டிடிஎச் தளங்களான சன் டைரக்ட்டில் சேனல் எண்.128, டாடா ஸ்கையில் சேனல் எண்.1555, ஏர்டெல்லில் சேனல் எண்.763, டிஷ் டிவியில் சேனல் எண்.1808 மற்றும் வீடியோகான் டி2எச்சில் சேனல் எண்.553-ல் ஒளிபரப்பாகிறது.
Read More »தெறிக்கும் covid -19 Awareness Gana song
covid -19 zonal level IEC campaign awareness through chennai Gana singers Chief Guest :: Thiru P.N SRIDHAR ,IAS Regional Deputy commissioner Central Greater chennai corporation Chief Guest :: Thiru G TAMILSELVAN ,ME Zonal officer zone -7 Greater chennai corporation
Read More »COLORS Tamil brings you Yoga for World Health – virtual yoga, celebrities and a good cause!
Chennai, June 21, 2020: Tamil Nadu’s youngest GEC channel COLORS Tamil celebrated this International Yoga Day with an extensive virtual yoga session in association with Rotary Club of Madras Central on Sunday. Titled Yoga for World Health, the event stressed on the importance of practicing yoga in our everyday lives for mental and emotional wellbeing. …
Read More »கொரோனா பாதித்த நோயாளிகளை தொலைவில் இருந்து கண்காணிக்கும் அதிநவீன கருவியை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு வழங்கிய ஸ்டேசிஸ் நிறுவனம்
கொரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கென தொலைவில் இருந்து நோயாளிகளை கண்காணிக்கும் அதி நவீன கருவி ஒன்று சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கருவியை பயன்படுத்தி சிகிச்சையளிப்பதன் மூலம் தொற்று பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கு மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் நோய் தொற்று ஏற்படுவதை தடுக்க முடியும் என்று அந்த கருவியை வடிவமைத்துள்ள ஸ்டேசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளியின் செயல்பாடுகளை இந்த கருவியின் மூலம் …
Read More »
Open Mic Tamil Here For Entertainment